முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, January 22, 2008

மனிதம் (கவிதை)

உலகில்.............!
இன,மொழி, சாதி, மத, பேதங்களிற்கப்பால்
மனிதம் இருக்கிறது.

இனவெறிக்கொண்ட ...!
இலங்கை திரு நாட்டில்
கட்டவிழ்த்து விடப்பட்ட - தமிழின
அழிப்பாலும், சுத்திகரிப்பாலும். ..

பாதிக்கப்பட்ட...!
பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்.
இனவெறியர்களையும்,
இழிமத மனநோயாளர்களையும் - கண்டே கொதித்தவேளை

என்னுள்ளும் புகுந்தது
எங்கிருந்தோ இனவெறி
காலங்கள் கற்றுத்தந்த
பாடங்களாய்.................!

மதம் பாராது, இனம் பாராது
மனிதாபிமானத்துடன் செயலாற்றும்
மாமனிதர்களின் செயற்பாடுகள் - என்
மனக் கசடறுத்தது.

மனித நேயத்துடன் தொண்டாற்றும்
மகத்தான அமைப்புகளினதும் - எண்ணற்ற
தொண்டு நிறுவனங்களினதும் செயல்பாடுகள்...!
உரத்துச் சொல்லியது ஓர் உண்மையை - அது
உயர்ந்தது மனிதம் தான் என்று.

ஆம்............!
உலகில் இன, மொழி, சாதி, மத,பேதங்களிற்கப்பால்
மனிதம் இருக்கின்றது.