முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Monday, July 14, 2008

தமிழ் இலக்கணம் கற்க

தாயகத்தின் தென் பிரதேசமான வவுனியாவில் பேரின்பராஜ் ரவிகாந்தன் என்பவர் "சோழர் தலைவன்" எனும் புனைப்பெயரில் "வவுனியா தமிழ்" எனும் கூகிள் குழுமத்தில் இணைந்து எளிய வழியில் தமிழ் இலக்கணப் பாடங்களை வழங்கி வருகின்றார்.

உள் நாட்டுப் போரின் பல பின்னடைவுகளின் நடுவில், தாம் பிறந்த மண்ணின் மணம் வீசச் செய்யும் இவர் போன்றோரின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவைகள். மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டியவைகள்.

அந்நிய மொழிகளை இலக்கணத்துடன் கற்க முயற்சிக்கும் நம்மில் பலருக்கு, தாய்மொழியாம் தமிழின் இலக்கண விதி முறைகள் தெரிவதில்லை.

பாடசாலைகளில் கல்வி கற்கும் காலங்களில் தமிழ் இலக்கணம் கற்பதற்கு பெரிதாக ஆர்வம் இல்லாத பலர், காலம் கடந்து கற்க முற்படுவதையும் இன்று இணையத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்நிய சூழ்நிலையில் தமிழ் இலக்கணம் முறையாகக் கற்க வாய்ப்பில்லாதவர்களும் நிறையவே இருக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் சோழர் தலைவனின் தமிழ் இலக்கணம் கற்பித்தல் முயற்சி பயன்மிக்கதாக அமைகின்றது.

இதோ சுட்டிகள்:

தமிழ் இலக்கணம் கற்போம் 01

தமிழ் இலக்கணம் கற்போம் 02

தமிழ் இலக்கணம் கற்போம் 03

தமிழ் இலக்கணம் கற்போம் 04

தமிழ் இலக்கணம் கற்போம் 05

தமிழ் இலக்கணம் கற்போம் 06

தமிழ் இலக்கணம் கற்போம் 07

தமிழ் இலக்கணம் கற்போம் 08

2 comments:

சோழர் தலைவன் said...

மிக்க நன்றி நண்பரே

சோழர் தலைவன் said...

நணபரே வவுனியா தமிழ் குழுமம் என்னுடையது அல்ல என்னுடைய ஆசிரியரின் முயற்சி