முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Wednesday, December 26, 2007

"தமிழ்" குறும்படம்

புலம்பெயர் நாடுகளில், அந்நிய நாட்டு கலாச்சாரச் சூழ்நிலையில், தம் தாய் மொழியின் சிறப்பு மறந்த ஒரு பெற்றோரின் பிள்ளை வளர்ப்பும், தமிழே தெரியாமல் வளர்க்கப் பட்ட குழந்தைகளும், அதனால் ஏற்படும் விளைவையும் இக்குறும்படம் சித்தரிக்கிறது. பேரன் பேத்தியின் பாசத்தைத் தேடும் வயோதிபரின் நடிப்பு, புலம்பெயர் தேசங்களின் இன்றைய எமது சமுதாயத்தின் மனநிலை போன்றவற்றை இக்குறும்படம், படம் பிடித்துக்காட்டுகிறது. மேலும் உங்கள் கருத்துக்களை பார்த்து விட்டு கூறுங்கள்.



மேலே இக்குறும்படத்தை காண்பதில் சிக்கல் என்றால் கீழுள்ள இணைப்பை பயன்படுத்தலாம்.

http://video.google.com/videoplay?docid=-4956002887739148517

Wednesday, November 21, 2007

இராஜராஜச் சோழன்

இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பங்கள் அறிமுகமாகாக் காலத்திலேயே; தமிழரது கட்டிடக்கலை நுட்பமும், கலை நயமும் எவ்வளவு சிறப்புற்றிருந்தது என்பதற்கு இவ்விவரணமே ஒரு சிறந்த சான்றாகும்.



மேலே காணமுடியாவிட்டால் இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்.

Tuesday, November 20, 2007

விமானத் தரையிறக்கம் - காணொளி

ஹொங்கொங்கில் விமானம் தரையிறங்கும் பொழுது, வானில் இருந்து கண்கள் காணும் காட்சிகளை, இக்காணொளி நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. பின்னனிப் பாடலும் மனதைத் தாலாட்டிச் செல்கின்றது.

Wednesday, November 14, 2007

பன்னாட்டு திருக்குறள் மாநாடு

இந்திய ஜனாதிபதி Dr. AJP அப்துல் கலாம்

அமெரிக்கா வொசிங்டன் நகரில் 2005 யூலை 8-10 ஆம் நாட்களில் நடைப்பெற்ற பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் Dr. AJP அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய சிறப்புரைரையினை இந்தக் காணொளியில் காணலாம்.



இப்பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் கலந்துக்கொண்ட தமிழ் பேரறிஞ்ஞர்கள் தமிழின் சிறப்பையும், அதன் வரலாற்றையும், தொன்மையையும், பெருமைகளையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இந்த வரலாற்று உரை நிகழ்வுகளை தமிழரான நாம் எல்லோரும் கேட்க வேண்டும்.

தமிழ் மொழியின் சிறப்பினையும், தமிழ் தந்த திருக்குறளின் சிறப்பினையும் கீழுள்ள காணொளி ஊடாக அழகாக நடித்துக் காட்டிக்கின்றனர்.



திருக்குறளின் சிறப்பு
--------------------------------------------------------------------------
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். 1330 குறள்கள், பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பற்ற வாழ்வியல் நூல். மாதர்கள் தாம் தாம் அகவாழ்விலும் குமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடன் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 30 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

-------------------------------------------------------------------------
1. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல் கணக்கு

2. பதினெண்கீழ்க்கணக்கு

3. ஐம்பெருங்காப்பியங்கள்

4. ஐஞ்சிறு காப்பியங்கள்

ஆகியவை அவை. அவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன

இதில் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவுது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்
--------------------------------------------------------------------------
திருக்குறள் கற்க விரும்புகின்றவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

திருக்குறள் ஆங்கில விளக்கவுரையுடன்.

http://acharya.iitm.ac.in/cgi-bin/show_kural_ad.pl?1

பன்மொழிகளில் திருக்குறள்.

http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm

ஆங்கிலத்தில் திருக்குறள்

http://www.geocities.com/Athens/Academy/8357/book.html

தமிழில் திருக்குறள்

http://kural.muthu.org/

திருக்குறள் தமிழ் விளக்கவுரையுடன் தமிழ் விக்கிபீடியாவிலும் பார்க்கலாம்.

Thursday, November 1, 2007

கூகிள் தேடுதளமும் தமிழும்

கடந்த ஆண்டு (2006) கூகிள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட சொல் எது என்று தெரியுமா? Google Top Searches "tamil".

Monday, October 22, 2007

'குப்பி' திரைப்படம்

"குப்பி" இது 1991 மே மாதம் 21 ஆம் நாள் தமிழ்நாடு சிறிபெரும்புத்தூர் எனும் இடத்தில் நிகழ்ந்த ராஜிவ் காந்தி படுகொலையின் பின்னனியை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம்.

இத்திரைப்படத்தை கர்நாடக இயக்குநர் ரமேஸ் "சைனைட்" என்ற பெயரில் எடுத்து, பின் அதனை தமிழில் "குப்பி" எனும் பெயரில் மொழி மாற்றி வெளியிட்டுள்ளனர். ராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணமானவர்களாக கருதப்படும் ஒற்றைக் கண் சிவராசன், சுபா உற்பட அவர்களுடன் இணைந்து இருந்தவர்களின் இறுதி நாட்களை சித்தரிக்கும் விதமாக கதை செல்கிறது.

இந்திய சினிமாவுக்கே உரித்தான சினிமா தனம் எதுவுமின்றி, யதார்த்தமாக படம் எடுக்கப்பட்டுள்ளமை இப்படத்தின் சிறப்பாகும்.

பார்க்காதோர் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.



மேலே இத்திரைப்படத்தைக் காணமுடியாதவர்கள் இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்.

Tuesday, October 16, 2007

செருப்பு (குறும்படம்)

இராணுவப் பிடியிலிருந்து மீட்கப்பட்ட ஒரு பிரதேசம். அங்கே மீள் குடியேறும் மக்கள். அவர்கள் நிலங்களில் எல்லாம் கால் வைக்கமுடியாதப் படி கண்ட இடங்களிலெல்லாம் விதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள். யுத்தத்தால் அனைத்தையும் இழந்து, தொழில் வாய்ப்புமின்றி, யுத்தத்தின் கோரப்பிடிக்குள்ளும் வறுமைப் பிடிக்குள்ளும் சிக்குண்டு அன்றாட வாழ்க்கைக்கே அல்லலுறும் அவலம். இந்தப் பின்னனியுடன் தொடர்கிறது கதை.

சக மாணவ மாணவிகளைப் பார்த்து தனக்குமொரு சோடி செருப்பு வேண்டித்தரும் படி கூறும் மகள். வறுமை பிடிக்குள்ளும் தனது மகளுக்காக உழைத்து செருப்பு வேண்டிவரும் தகப்பன். கடைசியில் செருப்பு வேண்டி வருவதை அறிந்து ஆசையுடன் தந்தையிடம் ஓடும் மகளை, காணியில் புதையுண்டுக் கிடந்த நிலக் கண்ணிவெடி பதம் பார்க்கிறது.

காலையிழந்து செருப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடையும் சிறுமியின் நடிப்பு மனதை நெகிழவைக்கின்றது.

பகுதி 1




பகுதி 2

தமிழ் சிங்களத் திரைப்படம்

"ஏ நைன் பாதை" இது ஏ 9 பாதை திறக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட திரைப்படம். சிங்களத் தமிழ் இருமொழி திரைப்படம். இத்திரைப்படத்தில் தமிழர் பாத்திரங்களுக்கு தமிழர்களும், சிங்கள பாத்திரங்களுக்கு சிங்களவர்களும், முஸ்லீம் பாத்திரங்களுக்கு முஸ்லீம்களுமாக முவ்வினத்தவரும் ஒன்றாக நடித்திருப்பது சிறப்பாக அமைந்திருக்கிறது. திரைப்படத்தின் நடிப்பு இந்திய சினிமா சாயலற்று, யதார்த்தமாக உள்ளது. ஆனால் திரைப்படத்தின் மூலக்கதை சிங்கள பக்கச் சார்புடையதாகவே உள்ளது.

போரின் கோரப்பிடிக்குள் உடைந்து சிதைந்து போயிள்ள கட்டிட எச்சங்களை அருமையாகக் காட்சிப்படுத்தப்படுத்தியுள்ளனர். அவற்றைப் பார்க்கும் போது எமது மனமும் உடைந்து சிதைந்து போகின்றது.

மேலும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் விமர்சனங்களைச் சொல்லுங்கள்.



இங்கே இப்படத்தை காணமுடியவில்லையெனில் கீழுள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

http://video.google.com/videoplay?docid=8140779693628308422&hl=en