
இத்திரைப்படத்தை கர்நாடக இயக்குநர் ரமேஸ் "சைனைட்" என்ற பெயரில் எடுத்து, பின் அதனை தமிழில் "குப்பி" எனும் பெயரில் மொழி மாற்றி வெளியிட்டுள்ளனர். ராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணமானவர்களாக கருதப்படும் ஒற்றைக் கண் சிவராசன், சுபா உற்பட அவர்களுடன் இணைந்து இருந்தவர்களின் இறுதி நாட்களை சித்தரிக்கும் விதமாக கதை செல்கிறது.
இந்திய சினிமாவுக்கே உரித்தான சினிமா தனம் எதுவுமின்றி, யதார்த்தமாக படம் எடுக்கப்பட்டுள்ளமை இப்படத்தின் சிறப்பாகும்.
பார்க்காதோர் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.