முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Tuesday, January 22, 2008

மனிதம் (கவிதை)

உலகில்.............!
இன,மொழி, சாதி, மத, பேதங்களிற்கப்பால்
மனிதம் இருக்கிறது.

இனவெறிக்கொண்ட ...!
இலங்கை திரு நாட்டில்
கட்டவிழ்த்து விடப்பட்ட - தமிழின
அழிப்பாலும், சுத்திகரிப்பாலும். ..

பாதிக்கப்பட்ட...!
பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்.
இனவெறியர்களையும்,
இழிமத மனநோயாளர்களையும் - கண்டே கொதித்தவேளை

என்னுள்ளும் புகுந்தது
எங்கிருந்தோ இனவெறி
காலங்கள் கற்றுத்தந்த
பாடங்களாய்.................!

மதம் பாராது, இனம் பாராது
மனிதாபிமானத்துடன் செயலாற்றும்
மாமனிதர்களின் செயற்பாடுகள் - என்
மனக் கசடறுத்தது.

மனித நேயத்துடன் தொண்டாற்றும்
மகத்தான அமைப்புகளினதும் - எண்ணற்ற
தொண்டு நிறுவனங்களினதும் செயல்பாடுகள்...!
உரத்துச் சொல்லியது ஓர் உண்மையை - அது
உயர்ந்தது மனிதம் தான் என்று.

ஆம்............!
உலகில் இன, மொழி, சாதி, மத,பேதங்களிற்கப்பால்
மனிதம் இருக்கின்றது.

No comments: